×

தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்தவர் மரணம்

மதுரை: மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்தவர் கதிரேசன் (70). இவருடைய மனைவி மீனாட்சி. இந்த தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை,

வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் கதிரேசன் தொடர்ந்த வழக்கை, மதுரை ஐகோர்ட் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கதிரேசன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி கதிரேசன் நேற்று உயிரிழந்தார்.

The post தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்தவர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Dhanush ,Madurai ,Katiresan ,Melur, Madurai district ,Meenakshi ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை