×

கிருஷ்ணகிரியில் பாஜக பிரசாரத்தின்போது பாமக நிர்வாகி மண்டை உடைப்பு.. மோதல்கள் தொடருவதால் தொண்டர்கள் அதிருப்தி !!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த செல்லம்பட்டி கிராமத்தில் பாஜக பிரசாரத்தின்போது பாமக நிர்வாகி மண்டை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் கட்சியான பாஜக இம்முறை தமிழகத்தில் தமாகா, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் நரசிம்மன் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது பாமக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாமக ஒன்றிய செயலாளர் ரங்கனிடம் கொடி கட்டுவதற்கும் மற்ற செலவினங்களுக்காகவும் பாஜகவினர் பணம் கொடுத்துள்ளனர். பரப்புரையின் போது அங்கு வந்த ஜெகநாதன் என்பவர் பாஜக நிர்வாகியான தனக்கு பணம் கொடுக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பரப்புரைக்காக கொடுக்கப்பட்ட பணத்தில் தனக்கு ஏன் பணம் தரவில்லை என ரங்கனிடம் பாஜக நிர்வாகி ஜெகநாதன் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில் பாஜக நிர்வாகி ஜெகநாதன், பாமக ஒன்றிய செயலாளர் ரங்கனை கீழே தள்ளியதில் அவரது மண்டை உடைந்தது.

ஆத்திரமடைந்த பாமகவினர் பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாஜக வேட்பாளரை உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்தினர். தலையில் பலத்த காயம் அடைந்த பாமக ஒன்றிய செயலாளர் ரங்கன், போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரப்புரரையின்போது பாமகவினர் பாஜகவினர் இடையே பல்வேறு இடங்களில் மோதல் நடைபெறுவதால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

The post கிருஷ்ணகிரியில் பாஜக பிரசாரத்தின்போது பாமக நிர்வாகி மண்டை உடைப்பு.. மோதல்கள் தொடருவதால் தொண்டர்கள் அதிருப்தி !! appeared first on Dinakaran.

Tags : BJP ,Krishnagiri ,BMC ,Chellampatti ,Bochampalli ,Krishnagiri district ,Lok Sabha elections ,Tamil Nadu ,
× RELATED கிருஷ்ணகிரியில் பாஜக நிர்வாகி பாமக நிர்வாகி மீது தாக்குதல்