×

வெம்பக்கோட்டை பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் படையெடுப்பு: சரணாலயம் அமைக்க கோரிக்கை


ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டை அருகே கோட்டையூர், சங்கரபாண்டியபுரம் பகுதிகளுக்கு இனப்பெருக்கத்திற்காக வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கியுள்ளன.எனவே இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். வெம்பக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட தாயில்பட்டி அருகே உள்ளது கோட்டையூர்.இங்குள்ள கண்மாய்க்கு 2வது முறையாக வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்துள்ளது. கோட்டையூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆண்டு பெய்த பருவமழையால்கோட்டையூர் கண்மாய் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப்புறத்தில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் உள்ளது.

அதன் காரணமாக தற்போது ஆஸ்திரேலியா நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து செங்கால் நாரை, கூழைக்கடா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. பல ஆண்டுகளாக ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சங்கரபாண்டியாபுரம் கிராமத்திற்கும் இந்த வகையான வெளிநாட்டு பறவைகள் ஆண்டுதோறும் வருவது வழக்கம். இங்கு இனப்பெருக்கம் செய்யும் பறவைகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத இறுதியில் அதனுடைய நாட்டிற்கு திரும்பச் செல்வது வழக்கம். மேலும், இங்கு வந்துள்ள வெளிநாட்டு பறவைகள் இங்கு உள்ள ஆலமரம் புளியமரம் வேப்பமரம் உள்ளிட்ட மரங்களில் கூடு கட்டி குஞ்சு பொறிக்கின்றன.

தற்போது கோட்டையூர் கண்மாயில் குறைவான அளவில் தண்ணீர் இருப்பதோடு சாக்கடைகள் கலந்து துர்நாற்றம் வீசுகின்றது.எனவே பறவைகள் வெம்பக்கோட்டை ஆலங்குளம் போன்ற நீர்தேக்கங்களுக்கு உணவிற்காக சென்று வருகின்றன. மேலும் பறவைகள் அச்சமின்றி இருப்பதற்காக அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டாசு, ஒலிப்பெருக்கி போன்றவற்றை நிகழ்ச்சிகளில் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தாயில்பட்டி கோட்டையூர், சங்கரபாண்டியபுரம் கண்மாய்க்கு வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடனும் ஆர்வமுடனும் வந்து ரசித்து செல்கின்றனர்.எனவே இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post வெம்பக்கோட்டை பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் படையெடுப்பு: சரணாலயம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Wembakottai ,Kottayur ,Sankarabandiapuram ,Wembakot ,Kothaiyur ,Thailpatty ,
× RELATED சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில்...