×

பாஜவில் இருக்கிறது எல்லாம் திருட்டு பய….. மொல்லமாரி பய… அண்ணாமலையின் நாக்கை வெட்ட வேண்டுமா இல்லையா?

மதுரை அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஒரு ஆட்டுக்குட்டி உள்ளது. உயரமான சுவற்றில் ஆட்டுக்குட்டி நின்று கொண்டு அவ்வழியாக சென்ற சிங்கத்தை பார்த்து சொல்லியதாம் எனக்கு பசிக்கிறது. குலையை பறித்து எனக்கு கொடு என்று சொன்னதாம். சுவர் என்பது ஆளுங்கட்சி. மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் மெதப்பில் அண்ணாமலை பேசி வருகிறார். முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் அண்ணாமலை. உங்கள் அப்பன் இல்ல. யார் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.

அரசியலில் கத்துக்குட்டி அண்ணாமலை. வரலாறு தெரியாத அண்ணாமலை, படித்து பாஸ் செய்தாரா? இல்லை பிட் அடிச்சு பாஸ் செய்தாரா என தெரியவில்லை. அதிமுக அழிந்து போகும் எனக் கூறும் அண்ணாமலைக்கு மக்கள் சாபமிடுவார்கள். திராவிட இயக்கம் வளர வேண்டும் என உழைத்த தலைவர்களை இழிவாக பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது. அண்ணாமலையின் நாக்கு வெட்டப்பட வேண்டுமா? இல்லையா?. 10 ஆண்டுகள் தமிழகத்திற்கு என்ன செய்தது பாஜ அரசு. பாஜவில் முழுவதும் திருட்டு பய….. மொல்லமாரி பய… என அனைவரும் கட்சியில் சேர்ந்துவிட்டனர். அண்ணாமலை வந்த பின்பு தான் இவ்வாறு பாஜகவில் நடக்கிறது. அதிமுக அழிந்து போகும் எனக்கூறும் அண்ணாமலை அழிந்து போவார். அரசியலில் அப்புறப்படுத்தப்படுவாய். அட்ரஸ் இல்லாமல் போவாய். தேன்கூட்டில் கை வைத்தால் நிச்சயம் பாதிக்கப்படுவார்.

ஒரு கவுன்சிலருக்கு கூட நின்று ஜெயித்ததில்லை அண்ணாமலை. ஆனால் நிறைய பேசுகிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்தும் அண்ணாமலைக்கு ஓட்டு போடவில்லை மக்கள். அதிமுகவையும், அதிமுக தலைவர்களையும் பேச அண்ணாமலைக்கு அருகதையே இல்லை
இவ்வாறு அவர் பேசினார்.

The post பாஜவில் இருக்கிறது எல்லாம் திருட்டு பய….. மொல்லமாரி பய… அண்ணாமலையின் நாக்கை வெட்ட வேண்டுமா இல்லையா? appeared first on Dinakaran.

Tags : BAJA ,Mollamari Paya ,MINISTER ,CELLUR ,RAJU ,MADURAI ADAMUKA ,SARAVAN ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...