×

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவை கைது செய்தது சிபிஐ

புதுடெல்லி: மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா மாஜி முதல்வர் மகள் கவிதாவை சிபிஐ நேற்று கைது செய்தது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகரராவின் மகளும் எம்எல்சியுமான கே.கவிதாவை கடந்த 15ம் தேதி ஐதராபாத்தில் அமலாக்கத்துறை கைது செய்தது. அமலாக்கத்துறை காவல் முடிந்த பிறகு டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் உள்ள கவிதாவிடம் விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கேட்டிருந்தது. அதற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் சிறையில் உள்ள கவிதாவிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். கவிதா உடன் குற்றம் சாட்டப்பட்ட புச்சிபாபு என்பவரின் செல்போன் வாட்ஸ் அப் உரையாடல்கள் மற்றும் கிடைத்த ஆவணங்களில் இருந்து மதுபான கொள்கையை சாதமாக மாற்றி அமைக்க ஆம் ஆத்மிக்கு கொடுத்த ரூ.100 கோடி லஞ்சம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து கவிதாவை சிபிஐ நேற்று கைது செய்தது.

The post டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவை கைது செய்தது சிபிஐ appeared first on Dinakaran.

Tags : CBI ,Kavita ,Delhi ,New Delhi ,Telangana ,chief minister ,Kavitha ,K. Kavita ,MLC ,K. Chandrasekharara ,Hyderabad ,
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான...