×

பாஜவில் சேர்ந்த 2 பிஜேடி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: ஒடிசா சபாநாயகர் அதிரடி

புவனேஸ்வர்: ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்டபேரவை தேர்தலும் நடக்கிறது. மொத்தம் உள்ள 147 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு 4 கட்டங்களாக அங்கு தேர்தல் நடத்தப்படுகிறது. மாநிலத்தில் நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் பிஜூ ஜனதா தளத்தை சேர்ந்த அரபிந்தா டாலி, பிரேமானந்தா நாயக் ஆகியோர் கடந்த மாதம் பிஜேடியில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்தனர்.

தங்களுடைய உறுப்பினர் பதவியை தாமாக ராஜினாமா செய்த இரண்டு எம்எல்ஏக்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு தலைமை கொறாடா பிரசந்த குமார் முதுலி சபாநாயகரிடம் புகார் அளித்தார். விசாரணைக்கு ஆஜராகுமாறு சபாநாயகர் உத்தரவிட்ட போதும் இரண்டு பேரும் ஆஜராகவில்லை.

இந்நிலையில், அரபிந்தா, பிரேமானந்தா ஆகியோரை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிரமிளா மாலிக் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அவர்களது ஜெய்தேவ் மற்றும் தெல்கோய் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பாஜவில் சேர்ந்த 2 பிஜேடி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: ஒடிசா சபாநாயகர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : BJP ,Odisha ,Bhubaneswar ,Lok Sabha elections ,Arabinda Dali ,Premananda ,Biju Janata Dal ,Speaker ,Dinakaran ,
× RELATED வெளி மாநிலத்தவர் என பாஜ என் மீது...