×

சங்கிலி பறிக்க முயன்ற தர்மபுரி வாலிபர் கைது

ஊத்தங்கரை, ஏப்.10: ஊத்தங்கரையை அடுத்த, கல்லாவியை சேர்ந்தவர் சங்கீதா (38), இவர் கல்லாவி மொரப்பூர் செல்லும் பிரிவு ரோடு அருகே, நர்சரியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் சங்கீதாவின் கழுத்தில் கொடுவாள் வைத்து செயினை கழட்டி தர மிரட்டினார். சங்கீதா அலறி சத்தம் போட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் விரைந்து வர, அந்த நபர் தப்பியோட முயன்றார். அவரை பொதுமக்கள் பிடித்து கல்லாவி போலீசில் ஒப்படைத்தனர். கல்லாவி போலீசார் நடத்திய விசாரணயில், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த, சுண்டக்காபட்டியை சேர்ந்த தனுஷ் (20), என்பது தெரிய வந்தது. இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஆவார். தனுசை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post சங்கிலி பறிக்க முயன்ற தர்மபுரி வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Uthangarai ,Sangeeta ,Kallavi ,Morapur ,Dinakaran ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...