×

தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற 106 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் கடந்த 7ம் தேதி நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற 106 அரசு ஊழியர்களை மாவட்ட தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் பி.ஆர்.எஸ் கட்சி வேட்பாளரும், சித்திப்பேட்டை முன்னாள் கலெக்டருமான பி.வெங்கட்ராமி கடந்த 7ம் தேதி தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் நடத்தினார்.

அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டத்தில் 106 அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். இது குறித்து பாஜ புகார் செய்தது. விசாரணை நடத்திய சித்திபேட்டை கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மிக்கிலினேனி மனு சவுத்ரி 106 அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

 

The post தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற 106 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,7th ,Telangana ,PRS ,Siddipet P. Venkatrami ,Dinakaran ,
× RELATED திருட முயன்றபோது பயங்கரம்;...