×

2.5 கோடி சிறு குறு நிறுவனங்களை மூடியது தான் பாஜ சாதனை: சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் பேச்சு

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.கே.நகர் பகுதிக்குழு சார்பில் வ.உ.சி. நகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் பங்கேற்று பேசியதாவது: நாடு முழுவதும் 7 கோடி குறு சிறு நிறுவனங்கள் உள்ளன. அதில் 2.5 கோடி நிறுவனங்கள் தொழில் செய்ய முடியாமல் மூடப்பட்டு விட்டன. அதற்கு காரணம் பாஜவின் தவறான கொள்கைதானே. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே வருகிறது. சாதாரண ஏழை, நடுத்தர மக்கள், தொழிலாளர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை பற்றி பாஜ அரசுக்கு கவலையில்லை. அவர்களின் கவலையெல்லாம் பெரு முதலாளிகள் குறித்துதான் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க மீண்டும் பாஜ ஆட்சிக்கு வரக்கூடாது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு இந்த பகுதி மக்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் கலாநிதி வீராசாமிக்கு வாக்களித்து மகத்தான வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

The post 2.5 கோடி சிறு குறு நிறுவனங்களை மூடியது தான் பாஜ சாதனை: சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,CITU ,state ,president ,Soundararajan ,West Chennai Parliamentary Constituency ,DMK ,Kalanithi Veerasamy ,VUC ,Marxist Communist Party RK Nagar Regional Committee ,A. Soundararajan ,
× RELATED சீராக வழங்க கோரிக்கை பொன்னமராவதியில் மே தின விழா கொண்டாட்டம்