×

மோடி, அமித்ஷாவை பார்த்தாலே எடப்பாடிக்கு பயம் வந்துவிடுகிறது: கொளத்தூரில் கனிமொழி பிரசாரம்

பெரம்பூர்: வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து நேற்றிரவு கொளத்துாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் கனிமொழி பேசியதாவது; நடைபெறுகின்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தல். ஆனால், இது ஒரு சட்டமன்ற தேர்தல் என்பது போல், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து எங்களை குற்றம்சாட்டி வருகிறார். அவரது புகார்களுக்கு நாங்கள் பதிலளித்து வருகிறோம். அவர், கொளத்துார் தொகுதியில் பிரசாரம் செய்தபோது, கொளத்தூர் தொகுதிக்கு ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்கிறார்.

அவர் இந்த தொகுதிக்கு முதல்வரான பின் 3 ஆண்டுகளில் 52 முறை வந்துள்ளார். அவர் எவ்வளவு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் என்பது இந்த தொகுதி மக்களுக்கு தெரியும். இதுவரை எடப்பாடி பழனிசாமி மோடியை பற்றி ஏதாவது ஒருவார்த்தை பேசி ஓட்டு கேட்டுள்ளாரா? அவருக்கு மோடி, அமித்ஷாவை பார்த்தால் பயம். சசிகலாவை பார்த்தாலும் பயம். பயத்தால்தான் அவர் பாஜக.வினரை விமர்சனம் செய்யவில்லை. இந்த தேர்தலில் பொதுமக்கள் அதிமுகவுக்கு தக்கபாடம் புகட்டுவார்கள். இவ்வாறு பேசினார்.

The post மோடி, அமித்ஷாவை பார்த்தாலே எடப்பாடிக்கு பயம் வந்துவிடுகிறது: கொளத்தூரில் கனிமொழி பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Modi ,Amit Shah ,Kanimozhi ,Kolathur ,Perambur ,Deputy General Secretary ,DMK ,Kalanithi Veerasamy ,North Chennai Parliamentary Constituency ,Koluthar ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்காக மத துவேஷ...