×

நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை..!!

நெல்லை: நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். நயினார் நாகேந்திரனின் ஓட்டல் மேலாளரிடம் அண்மையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த நிலையில் தற்போது அவரது காரில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ.4 கோடி நயினார் நாகேந்திரனுக்காக எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையிலும் பணம் கைப்பற்றப்பட்டது. ஆலங்குளம் பகுதியில் பிரச்சாரம் செய்ய சென்றபோது இடைகால் விலக்கு என்ற இடத்தில் நயினார் நாகேந்திரனின் காரில் சோதனை நடத்தப்பட்டது. காரில் இருந்த சூட்கேஸை தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துக்குமார் தலைமையிலான குழு திறந்து பார்த்து சோதனை செய்தது. நயினார் நாகேந்திரனின் வாகனம் மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களின் வாகனங்களையும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

The post நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Nella Constituency ,BJP ,Nayinar Nagendran ,Nella ,Tambaram ,Train ,Dinakaran ,
× RELATED நெல்லை பாஜக வேட்பாளர் நயினார்...