×

நாகப்பட்டினத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து முதியவர் சாவு

*கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதியவர் ஒருவர் உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும். வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நேற்று (8ம் தேதி) குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. இருப்பினும் தேர்தல் தொடர்பாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டம் நடந்தது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் அதிரடிப்படை போலீசார் மற்றும் போலீசார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 60 வயது நிறைந்த முதியவர் துணிப்பையுடன் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அலுவலக வளாகத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு வந்த முதியவர் தான் வைத்திருந்த பையை திறந்து அதில் இருந்து வாட்டார் கேனை வெளியில் எடுத்து திறந்தார். கேனில் வாங்கி வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி கண் இமைக்கும் நேரத்திற்குள் தீவைத்து கொண்டார். அவரது உடல் முழுவதும் தீ மளமளவென பிடித்து எரிந்தது.

அப்போது அங்கு இருந்த பாத்ரூமில் இருந்து வெளியே வந்த அதிரடிப்படை காவலர் தீயை அணைக்க முயற்சி செய்தார். மேலும் அருகில் நின்ற மற்ற காவலர்களை அழைத்தார். இதன்பின்னர் அங்குள்ள கடைகளில் இருந்து தண்ணீரை வாங்கி வந்து முதியவர் உடலில் ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அவரது உடலில் பாதி பகுதி கருகியது. இதன்பின்னர் சிகிச்சைக்காக அவரை நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அருகே வாட்டாக்குடி நடுத்தெருவை சேர்ந்த சேகர் (61) என தெரிய வந்தது. மேலும் விசார ணையில், சேகரின் மனைவி குமுதம்(56) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

மகள் சிவகாமசுந்தரி(35) மாற்றுத்திறனாளியான இவர் வேளாங்கண்ணி உடல் ஊனமுற்றோர் காப்பகத்தில் தங்கியுள்ளார். மகன் அருள்ராஜ்(33) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் இருந்துள்ளார். மற்றொரு மகன் சபரிநாதன். தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். மனைவி குமுதம் மற்றும் மகன் சபரிநாதன் இறப்பிற்கு கூட சேகர் வரவில்லை.

இதனால் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் இரண்டு பேரின் உடலை அடக்கம் செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் சேகர் சுற்றி திரிந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாகப்பட்டினத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து முதியவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி...