×

கேரளாவில் 10 பேர் வாபஸ் 20 தொகுதிகளில் 194 பேர் போட்டி

திருவனந்தபுரம்: கேரளாவில் 10 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து 20 தொகுதிகளில் 194 பேர் போட்டியிடுகின்றனர். கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கு வரும் 26ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச் 28ம் தேதி தொடங்கி கடந்த 4ம் தேதியுடன் முடிவடைந்தது. மொத்தம் 290 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 86 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெறவேண்டிய கடைசி நாள் நேற்று ஆகும். 10 பேர் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து தற்போது கேரளாவில் 194 பேர் களத்தில் உள்ளனர். கோட்டயம் தொகுதியில் தான் மிக அதிகமாக 14 பேர் போட்டியிடுகின்றனர். ஆலத்தூரில் குறைவாக 5 பேர் போட்டியிடுகின்றனர். 194 வேட்பாளர்களில் 25 பேர் பெண்கள் ஆவர். வடகரையில் தான் அதிகமாக 4 பெண்கள் போட்டியிடுகின்றனர்.

The post கேரளாவில் 10 பேர் வாபஸ் 20 தொகுதிகளில் 194 பேர் போட்டி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...