×

வரும் 17ம் தேதி முதல் 3 நாள் டாஸ்மாக் விடுமுறை

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் 17ம் தேதி முதல் 3 நாள் டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக வருகிற 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்னை இல்லாமல் அமைதியாக நடைபெற அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார் இருக்கும் டாஸ்மாக் கடைகள் வரும் 17ம் தேதி காலை 10 மணி முதல் 19ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூடி இருக்க வேண்டும். மேலும் வாக்கு எண்ணும் ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடவேண்டும். இந்த தேதிகளில் திறந்து இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

The post வரும் 17ம் தேதி முதல் 3 நாள் டாஸ்மாக் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Tasmac administration ,Dinakaran ,
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்