×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.72 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று 73,801 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 23,055 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. இதில் ₹3.72 கோடி காணிக்கையாக கிடைத்தது.

இன்று காலை நிலவரப்படி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறையில் காத்திருக்காமல் நேரடியாக சென்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.72 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupati Esummalayan Temple ,Tirumala ,Swami ,Tirupati Eyumalayan temple ,Tirupati Eeumalayan temple ,
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி