×

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்!

டெல்லி: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டுமனையை கணேசன் என்பவருக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக கடந்த 2012ல் அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து அமைச்சரை விடுவித்து கடந்த 2023 மார்ச் மாதம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை தொடர்ந்து அமைச்சரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர சபாநாயகர் ஒப்புதல் அளித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை.

அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஐ.பெரியசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதிட்டார். அதனை தொடர்ந்து ஐ.பெரியசாமிக்கு எதிராக தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது கீழமை நீதிமன்றத்தில் விசாரணையை தொடரக்கூடாது. அடுத்த விசாரணைக்கான வரும் தேதி வரை கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது. கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்! appeared first on Dinakaran.

Tags : Minister ,Supreme Court ,Peryasami ,Delhi ,Dinakaran ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...