×

எனக்கு இனி அதிமுக தேவை இல்லை: தேர்தல் முடிந்ததும் எடப்பாடி கதை என்ன ஆகுமோ? கொளுத்தி போட்ட டிடிவி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே பாஜ வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்றுமுன்தினம் இரவு பேசியதாவது: எடப்பாடியின் தூக்கத்தை இன்று கெடுத்து கொண்டிருப்பவர் வைத்திலிங்கம் தான். ஏதோ காலத்தின் கட்டாயத்தினால் தான் நாங்கள் எல்லாம் பிரிந்து இருக்கிறோம். அது இந்த துரோகி எடப்பாடிக்கு வாய்ப்பாகி விட்டது. உண்மையிலேயே தஞ்சை தொகுதியில் நான் தான் நிற்க வேண்டுமென ஆசைப்பட்டேன்.

அதிமுகவை மீட்டெடுக்க போராடும் ஓபிஎஸ் எப்படி தாமரை சின்னத்தில் நிற்க முடியும். அதனால்தான் அவர் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். நானும், ஓபிஎஸ்சும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். பெரிய கூட்டணி அமைத்திருப்பதாக கூறும் எடப்பாடி சேலத்தில் நிற்க வேண்டியது தானே.

போன பிறவியில் எடப்பாடியின் பாட்டன், பூட்டன் செய்த புண்ணியம், சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சரானார். தேர்தல் முடிந்ததும் எடப்பாடியின் கதி என்ன ஆகுமோ என்றே தெரியாது. எடப்பாடி பழனிசாமியின் கூட்டம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும். எனக்கு இனி அதிமுக தேவையில்லை. நான் தனியாக அமமுக கட்சியை ஆரம்பித்து எனது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் அதிமுகவை மீட்டெடுத்த பிறகு அவர்களோடு கூட்டணி வைத்துக்கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post எனக்கு இனி அதிமுக தேவை இல்லை: தேர்தல் முடிந்ததும் எடப்பாடி கதை என்ன ஆகுமோ? கொளுத்தி போட்ட டிடிவி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Edappadi ,DTV ,BJP ,Karupu Murugananda ,Anna statue ,Thanjavur district ,AAM ,MUK ,General Secretary ,Dhinakaran ,Vaithilingam ,Koluthi Putta ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்