×

சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்டு பெட்ரோல் பங்க் ஊழியர் வீட்டில் 40 சவரன், ரூ.90 ஆயிரம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

 

சென்னை, ஏப்.7: சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்டு, பெட்ரோல் பங்க் ஊழியர் வீட்டில் 40 சவரன் நகைகள் மற்றும் ரூ.90 ஆயிரத்தை கொள்ளையடுத்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் ேதடி வருகின்றனர். ஆவடி அடுத்த திருநின்றவூர், நாகாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் அலமேலு மங்கை (43). இவரது கணவர் முருகேசன் (45), பெட்ரோல் பங்க் ஊழியர்.

இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில், அலமேலு மங்கை கடந்த வாரம், மகளுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில், அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். கடந்த 4ம் தேதி, முருகேசன் வழக்கம் போல் வீட்டை பூட்டி, சாவியை ஜன்னல் அருகே வைத்துவிட்டு வேலைக்கு சென்றார். நேற்று மாலையில் முருகேசனின் மகன் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபோது கதவு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு லாக்கரை உடைத்து உள்ளே இருந்த 40 சவரன் நகைகள், ரூ.90 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடுத்துச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து திருநின்றவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்கு பதிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்டு பெட்ரோல் பங்க் ஊழியர் வீட்டில் 40 சவரன், ரூ.90 ஆயிரம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Petrol punk ,Chennai ,Petrol Bank ,Avadi ,Thirunindravur, Nagathamman ,Punk ,
× RELATED பட்டாசுகளுடன் சென்ற 2 வேன்கள் பறிமுதல்