×

கூலி தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை

விருதுநகர், ஏப். 7: கூலி தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(55). இவரும், இவரது மனைவியும் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இருவரும் காலை வேலைக்கு சென்று விட்டு, மாலை வீட்டிற்கு வந்த போது பீரோவில் இருந்த 7.5 பவுன் நகை, ரூ.75ஆயிரம் பணத்தை கொள்ளைபோனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன் ரூரல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடிய நபர்களை தேடிவருகின்றனர்.

The post கூலி தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Krishnan ,Rosalpatti, Virudhunagar ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...