×

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் போலீஸ் அதிகாரி பலி

பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர்பக்துன்வா ஆப்கானிஸ்தானின் எல்லை ஒட்டி அமைந்துள்ளது. அந்த பகுதியில் போலீசாரை குறி வைத்து தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். போலீஸ் டிஎஸ்பி குல்முகமது கான் மஞ்சிவாலா சவுக் பகுதி வழியாக நேற்று சென்று கொண்டிருந்த அவரது வாகனத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், குல்முகமது மற்றும் அவரது பாதுகாவலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கைபர் பக்துன்வாவில் இந்த ஆண்டில் மட்டும் 245 தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில்,432 பேர் பலியாகி உள்ளனர்.

The post பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் போலீஸ் அதிகாரி பலி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Peshawar ,Khyber Pakhtunkhwa ,Afghanistan ,DSP ,Gul Muhammad Khan ,Manjiwala Chowk ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை...