×

3 கிலோ தங்க நகைகள் அணிந்து ஏழுமலையானை தரிசித்த பக்தர்

திருமலை: 3 கிலோ தங்க ஆபரணம் அணிந்தபடி ஏழுமலையானை தங்க மனிதர் வழிபாடு செய்தார். அவரை பக்தர்கள் வியப்புடன் பார்த்தனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியை சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவராவ். இவர் எப்போதும் கிலோ கணக்கில் நகைகள் அணிவது வழக்கம். இதனால் அவரை `தங்க மனிதர்’ என்று அந்த பகுதி மக்கள் அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சாம்பசிவராவ் 3 கிலோ தங்க நகைகளை அணிந்தபடி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார். பின்னர் வாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி விட்டு வி.ஐ.பி. தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது சாம்பசிவராவ் அணிந்திருந்த நகைகளை அங்கிருந்த பக்தர்கள் வியப்புடன் பார்த்தனர். மேலும் சிலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

The post 3 கிலோ தங்க நகைகள் அணிந்து ஏழுமலையானை தரிசித்த பக்தர் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Sambasivarao ,Mangalagiri, Guntur District, Andhra Pradesh ,
× RELATED திருமலையில் காற்றுடன் கனமழை: பக்தர்கள் மகிழ்ச்சி