×

தேர்தல் எதிரொலி திருச்சி ரயில் நிலையத்தில் சோதனை

 

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பயணிகளை சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் வரும் ஏப்.19ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் ஆவணங்களின்றி எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரயில்வே இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி மற்றும் எஸ்எஸ்ஐ பாலமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று ரயில் நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்.

The post தேர்தல் எதிரொலி திருச்சி ரயில் நிலையத்தில் சோதனை appeared first on Dinakaran.

Tags : Election ,Trichy ,Trichy railway station ,Tamil Nadu ,Election reverberation Trichy railway station ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...