×

பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பவர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

 

பெரம்பலூர்,ஏப்.6: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வழக்கமான குற்ற வாளிகள், சரித்திர பதி வேடு குற்றவாளிகள், போதைப்பொருள் விற் பவர்கள் ஆகியோர்களின் வீடுகளிலும் வெடிமருந்து கிடங்குகள், பெட்ரோல் பங்க் போன்ற இடங்களிலும் பெரம்பலூர் மாவட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின்படி பெரம்பலூர் மாவ ட்டத்தில் உள்ள வழக்கமான குற்றவாளிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பவர்கள் ஆகியோர்களின் வீடுகளிலும் வெடிமருந்து கிடங்குகள், பெட்ரோல் பங்க் போன்ற இடங்களி லும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டது.

வருகின்ற பாராளுமன்ற பொது தேர்தலையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்ப வங்களும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரி க்கை நடவடிக்கையாக இந்த அதிரடி சோதனையா னது பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம்) மதியழகன்,(மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு) பாலமுருகன், பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி பழனிச் சாமி, மங்களமேடு உட் கோட்ட டிஎஸ்பி தனசேகர், (ஆயுதப்படை) சோமசுந் தரம் மற்றும் இன்ஸ்பெக் டர்கள், சப்.இன்ஸ்பெக்டர் கள், ஏட்டுகள் உள்ளிட்ட போலீசாரைக் கொண்டு பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங் களில் நடத்தப்பட்டது.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் எந்தவித பிர ச்சனையும் ஏற்டாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் காவ ல்துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ் ச்சி நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பவர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Tags : Perambalur district ,PERAMBALUR, AP.6 ,PERAMBALUR DISTRICT POLICE ,SARITRA PATI ,PETROL ,Perambalur ,Dinakaran ,
× RELATED நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் ஆத்தூர்...