- ரயில்வே பாதுகாப்புப் படைகளின் கொடி அணி
- ககுமலா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தூத்துக்குடி மாவட்டம்
- சமாஜ்வாடி
- பாலாஜி சரவணன்
- கோவில்பட்டி
- டிஎஸ்பி
- வெங்கடேஷ்
- ககுமலை காவல் நிலையம்
- விஜயகுமார்
- ரயில் பாதுகாப்பு படைகள் கொடி அணிவகு
- காகுகாமலை
கழுகுமலை.ஏப்.6: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் அறிவுறுத்தலின்படி கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் கழுகுமலை பகுதியில் நேற்று காலை 7 மணிக்கு கொடி அணிவகுப்பு நடந்தது. கழுகுமலை ஆறுமுகநகர் பகுதியில் இருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு மேலபஜார், அண்ணா புதுதெரு, கோவில்பட்டி மெயின்ரோடு, பிள்ளையார் கோவில் பேருந்து நிலையம், வேத கோவில் தெரு, கீழரதவீதி, தெற்கு ரத வீதி வழியாக காவல் நிலையத்தை வந்து அடைந்தது. இதில் ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் மற்றும் கழுகுமலை எஸ்ஐ வடிவேல் உட்பட ஏராளமான போலீசார் பங்கேற்றனர்.
The post கழுகுமலையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.