×

திருவனந்தபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 வாலிபர்கள் படுகாயம்

திருவனந்தபுரம், ஏப். 5: திருவனந்தபுரம் மண்ணந்தலை அருகே ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த 4 பேர் நேற்று முன்தினம் மாலை நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்தது. இதில் 4 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு டாக்டரிடம் சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து தீப்பிடித்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறி உள்ளனர். இதற்கிடையே குண்டு வெடித்த சத்தத்தை கேட்டு அந்த பகுதியினர் மண்ணந்தலை போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் குண்டு வெடித்ததில் காயமடைந்த 4 வாலிபர்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருப்பது தெரியவந்தது.

The post திருவனந்தபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 வாலிபர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Mannantalai, Thiruvananthapuram ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!