×

பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு குடியாத்தம் அருகே

குடியாத்தம், ஏப்.5: குடியாத்தம் அருகே பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளான குடியாத்தம் அடுத்த கள்ளுர், எர்தாங்கல் ஆகிய பகுதிகளில் நேற்று தேர்தல் பார்வையாளர் ரூபேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கடந்த தேர்தலின் போது நடைபெற்ற பிரச்னைகள் குறித்து குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமியிடம் கேட்டறிந்தார். மேலும், குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரனிடம் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தாசில்தார் சித்ராதேவி, பேரணாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் ரகு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Tags : Kudiatham ,Gudiatham ,Lok Sabha ,Rupesh Kumar ,Gudiyatham Assembly Constituency ,Gudiyatham ,Gallur ,Erthankal ,
× RELATED பண்ணையில் 2,500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின குடியாத்தம் அருகே பரிதாபம்