×

பெண் தூக்கிட்டு தற்கொலை

மேட்டுப்பாளையம், ஏப்.5: மேட்டுப்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் (68). இவரது மனைவி அமிர்தம் (64). இந்த தம்பதிக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வந்தனர். இந்நிலையில், மூத்த மகள் ஸ்ரீவள்ளிக்கு (41) கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பூரைச் சேர்ந்த மோகன் என்பவருடன் திருமணமாகி ஷ்யாம் நித்தின் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக அவர் கடந்த 8 ஆண்டுகளாக கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் மகனுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் சின்னம்மாள் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (45) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் ஸ்ரீவள்ளி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது ஸ்ரீவள்ளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Jayapal ,Amritham ,Srivalli ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...