×

பிளஸ் 1 மாணவனுக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் தனியார் பள்ளி ஆசிரியர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிளஸ் 1 மாணவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தந்த தனியார் பள்ளி ஆசிரியரை, போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பகுதியில் பிளஸ் 1 வரை உள்ள தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த காமேஷ் (42) என்பவர் பிளஸ் 1 மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக சைக்கிளை எடுக்க வந்த மாணவனிடம் ஆசிரியர் காமேஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, வீட்டிற்கு சென்ற பிறகும் மாணவனின் செல்போனுக்கு பாலியல் தொடர்பான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த மாணவனின் தாய், இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், காமேஷை கைது செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பிளஸ் 1 மாணவனுக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் தனியார் பள்ளி ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : Pokso ,Kanchipuram ,Sewilimedu ,Kanchipuram.… ,
× RELATED பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில்...