×

சென்செக்ஸ் 351 புள்ளிகள் உயர்ந்து 74,228 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் உயர்வுடன் முடிந்தன. காலை வர்த்தகத்தின் போது 624.91 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ் 74,501.73 புள்ளிகளைத் தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக நேரம் முடிவில் 351 புள்ளிகள் உயர்ந்து 74,228 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 184 பங்குகள் உயர்ந்து 22,619 புள்ளிகளில் என்ற புதிய உச்சம் தொட்டது. வர்த்தக நேரம் முடிவில் நிஃப்டி 80 புள்ளிகள் உயர்வுடன் 22,515 புள்ளிகளில் நிறைவடைந்தது.

 

The post சென்செக்ஸ் 351 புள்ளிகள் உயர்ந்து 74,228 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Sensex ,MUMBAI ,Sensex… ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!