×

சூர்யகுமார் யாதவ் மீண்டும் மும்பை அணிக்கு திரும்பியதால் ரசிகர்கள் உற்சாகம்!!

மும்பை: பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அனுமதி பெற்று உடற்தகுதி தேர்ச்சி தேர்வில் ஈடுபட்டு வந்த மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் மீண்டும் அணிக்கு திரும்பினார். டி20 பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் நம்பர் 1 இடத்தில இருக்கும் சூர்யகுமார் யாதவ், கடமந்த டிசம்பர் 2023இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது கடைசி போட்டி போட்டியில் விளையாடினார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அதன் பிறகு நீண்ட நாட்கள் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் தென்படவில்லை. இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அனுமதி பெற்று உடற்தகுதி தேர்ச்சி தேர்வில் ஈடுபட்டு வந்தார். தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். இதையடுத்து ஐபிஎல் தொடரில் வரும் 7ம் தேதி நடைபெற உள்ள டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி சார்பில் களமிறங்குகிறார்.

மும்பை இந்தியன்ஸ், புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் தலைமையின் கீழ், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 3 போட்டிகளில் விளையாயுள்ள மும்பை அணி ஒரு வெற்றியை கூட பெற முடியாமல் புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் தவித்து வருகிறது. ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவ கேப்டனாக நியமிக்கப்பட்டதும் தோல்விக்கான காரணம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மும்பை அணிக்கு எதிராக தான் ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோரை(277 ரன்கள்) பதிவு செய்தது, மும்பை அணியின் சாம்ராஜ்ஜியத்தை சற்று உலுக்கியுள்ளது. பும்ரா போன்ற தலை சிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்தும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்கள் குவித்தது மும்பை அணி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் மீண்டும் அங்கு திரும்புவதால் மும்பை அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

The post சூர்யகுமார் யாதவ் மீண்டும் மும்பை அணிக்கு திரும்பியதால் ரசிகர்கள் உற்சாகம்!! appeared first on Dinakaran.

Tags : Suryakumar Yadav ,Mumbai ,National Cricket Academy ,Bengaluru ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…