×

மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு

விருத்தாசலம், ஏப். 4: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள க.தொழூர் கிராமத்தில் உள்ள மணிமுத்தாற்றில் மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்றபோது பொக்லைன் இயந்திர உதவியுடன் மணல் திருடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்கிற துரை, மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கங்காரத்தினம் மகன் கபிலன்(27), க.தொழூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம்(54), கொடுமனூர் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கிருபா(25) ஆகிய 4 பேரை பிடிக்க முயற்சித்த போது தப்பித்து ஓடி தலைமறைவாகினர். தொடர்ந்து அங்கிருந்த பொக்லைன் இயந்திரம் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்து கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் துரை என்கிற விஜயகுமார், கபிலன், ராமலிங்கம், கிருபா ஆகிய 4 பேர் மீது கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Manimuthaar ,K. Tothur ,Karuvepilangurichi ,Vrudhachalam ,Selvakumar ,Dinakaran ,
× RELATED லாரி மோதி வாலிபர் பலி