×

இளம்பெண் தூக்குபோட்டு சாவு

 

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த சின்னக்கண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி மன்சிகா(21). இவர்களுக்கு கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் கடந்த சில தினங்களாக குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று ஆனந்தராஜ் வேலைக்கு செல்லும்போது மன்சிகா தடுத்துள்ளார். ஆனால் அதனையும் மீறி ஆனந்தராஜ் வேலைக்கு சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த மன்சிகா கடந்த 3ம் தேதி அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து அவரது தந்தை செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இளம்பெண் தூக்குபோட்டு சாவு appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Anandaraj ,Chinnakandiankuppam ,Mansika ,Anandraj ,
× RELATED மின்னல் தாக்கி கூலி தொழிலாளி பலி