×

ஆடு திருடிய வாலிபர் கைது

சேந்தமங்கலம், ஏப்.4: எருமப்பட்டி அடுத்த பொன்னேரி சலவைக்கல் தெருவை சேர்ந்தவர் விவசாயி ராம்ராஜ் (52). இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஆடுகளை மேச்சலுக்கு விட்டுவிட்டு, மாலை 6 மணிக்கு அனைத்து ஆடு, மாடுகளையும் பிடித்து தோட்டத்தில் கட்டி விட்டு, வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை தோட்டத்திற்கு வந்து பார்த்த போது, மர்ம நபர் ஒருவர் ஆட்டு கிடாவை திருடி டூவீலரில் வைத்து கொண்டு தப்பிச்செல்ல முயற்சி செய்தார். இதை பார்த்த ராம்ராஜ் உடனே சத்தம் போடவும், அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அந்த நபரை பிடித்து, எருமப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் மோகனூர் பெரியார் நகரை சேர்ந்த பொன்னுசாமி மகன் சென்ட்ரிங் வேலை செய்து வரும் முத்துகிருஷ்ணன் (32) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

The post ஆடு திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Ramraj ,Ponneri Salawaikal street ,Erumapatti ,Dinakaran ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை