×

பட்டதாரிகளுக்கு வாய்ப்பு 4,889 கிலோ அரிசி மூட்டைகள் பறிமுதல்

ஈரோடு, ஏப். 4: பெருந்துறை அருகே உள்ள கொம்மங்கோவில் அருகே வந்த மினிடோர் வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று இரவு சோதனையிட்டனர். அதில், பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான அரிசி மூட்டைகளை பெருந்துறைக்கு விற்பனை செய்யும் கடைக்கு எடுத்து சென்றது தெரியவந்தது. இதில், 26 கிலோ எடை கொண்ட 9 மூட்டைகள், 75 கிலோ எடை கொண்ட10 மூட்டைகள் என மொத்தம் 984 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர்.

இதேபோல, தாராபுரத்தில் இருந்து திருச்செங்கோட்டுக்கு ஈரோடு வழியாக, மற்றொரு மினிடோர் வேனில், 6 பேர் சேர்ந்து தங்கள் வீட்டின் தேவைக்காக, 75 கிலோ எடை கொண்ட 45 அரிசி மூட்டைகள், 26 கிலோ எடை கொண்ட 20 அரிசி மூட்டைகள் என 3,895 கிலோ அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.இந்த அரிசி மூட்டைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து மொத்தம் 4,889 கிலோ அரிசி முட்டைகளையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

The post பட்டதாரிகளுக்கு வாய்ப்பு 4,889 கிலோ அரிசி மூட்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Erode ,Election Flying Squad ,Kommangovil ,Perundurai ,Palanichami ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் மரணம்..!!