×

கச்சத்தீவு குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை மோடி, நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்கள்: செல்வப்பெருந்தகை காட்டம்

சென்னை: கச்சத்தீவு குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை மோடி, நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கச்சத்தீவு குறித்து மோடியும், நிர்மலா சீதாராமனும் பேசியது இலங்கை தமிழர்களிடையே பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. சீனாவோடு 13 முறை பேச்சு நடத்தியும் ஆக்கிரமித்த 200 சதுர கி.மீ. நிலத்தை மீட்க மோடி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை எனக்கூறி நற்சான்று வாங்கியதை இந்தியர்கள் ஏற்கமாட்டார்கள் என்று செல்வப்பெருந்தகை காட்டமாக கூறியுள்ளார்.

The post கச்சத்தீவு குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை மோடி, நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்கள்: செல்வப்பெருந்தகை காட்டம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Nirmala Sitharaman ,Selvaperundhakai Kattam ,Chennai ,Selvaperundagai ,Tamils ,China ,Selvaperunthakai Kattam ,
× RELATED பெண்களை முன்னிறுத்தி பல திட்டங்களை...