×

சாலையில் கிடக்கும் மரத்துண்டுகள்

 

ஊட்டி, ஏப்.3: ஊட்டி பாரஸ்ட்கேட் பகுதியில் சாலையோரம் கிடத்தி வைக்கப்பட்டுள்ள மரத்துண்டுகள் அகற்றப்படாமல் உள்ளதால் விபத்து அபாயம் நீடிக்கிறது. ஊட்டி பாரஸ்ட் கேட் பகுதியில் சாலையை ஒட்டி ஏராளமான ராட்சத கற்பூர மரங்கள் வளர்ந்துள்ளன. இவை பருவமழை சமயங்களில் சாலை மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இவற்றை வெட்டி அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெட்டப்பட்ட கற்பூர மரங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாலையோரம் கிடத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை குறுகி உள்ளதால் அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சாலையிலேயே நிறுத்த வேண்டியுள்ளது. மேலும் மரத்துண்டுகளால் விபத்து ஏற்படக்கூடிய அபாயமும் நீடிக்கிறது. எனவே பாரஸ்ட் கேட் பகுதியில் சாலையில் கிடக்கும் மர துண்டுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post சாலையில் கிடக்கும் மரத்துண்டுகள் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty Forest Gate ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...