×

வெற்றிலை பாக்கு இலவசம் எனக்கூறி சுருக்கு பை பணத்தை கூட சுரண்டும் பாஜ: போட்டு தாக்கும் அமைச்சர்

தஞ்சாவூரில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்கு மிகுந்த எழுச்சி காணப்படுகிறது. குறிப்பாக மகளிர் பெரும் அளவில் ஆதரவு தெரிவிப்பதை காண முடிகிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சுங்கச்சாவடி என்பதே உறுதியாக இருக்காது. மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் வாக்குச்சாவடியே இருக்காது என்பதை உறுதியாக தெரிவித்துள்ளோம்.

திமுக அரசின் மூன்றாண்டு சாதனையே கடந்த தேர்தலை விட கூடுதலாக 40 தொகுதிகளில் உறுதியாக வெற்றியை தேடித்தரும். 10 ஆண்டுகளுக்கு முன்னர் பாஜ ஆட்சி பொறுப்பேற்ற போது ரூ.375 முதல் ரூ.400 இருந்த கேஸ் விலையை, தற்பொழுது ரூ.1100 ஆக உயர்த்திய பாஜ, மகளிர் தினம் என்ற பெயரில் விலை குறைப்பு என்ற நாடகத்தை ஆடுகிறது.

கொஞ்சம் அசந்தால், முதியவர்கள் தினம் என்று கொண்டாடி வெற்றிலை, பாக்கு இலவசம் என்று வாக்குறுதி அளித்து அசறும் நேரத்தில் சுருக்கு ைபயில் இருக்கும் பணத்தை சுரண்ட கூடியவர்கள் பாஜவினர். பல்வேறு இடங்களில் வாக்கு கேட்டு வரும் பாஜவினரிடம் வங்கியில் ரூ.15 லட்சம் போடுவீர்கள் என்று சொன்னீர்களே என்ன ஆனது? என வாக்காளர்கள் கேட்பதை காணமுடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post வெற்றிலை பாக்கு இலவசம் எனக்கூறி சுருக்கு பை பணத்தை கூட சுரண்டும் பாஜ: போட்டு தாக்கும் அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : BJP ,Thanjavur School ,Education ,Minister ,Anpil Mahesh Poiyamozhi ,DMK alliance ,Tamil Nadu ,India alliance ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...