×

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜவிடம் அடகு வைத்தவர் பாதம் தாங்கி பழனிசாமி: எடப்பாடிக்கு உதயநிதி போட்டார் சூடு

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை கொளத்தூரில் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது, கொளத்தூர் மாதவரம் நெடுஞ்சாலை பகுதிகளில் பொதுமக்களிடம் திமுகவின் சாதனைகளையும் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களையும் கூறி வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

வடசென்னை உள்கட்டமைப்புக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து வடசென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வடசென்னையில் பிரத்யேக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்படும். தேர்தலின் போது மட்டும் தமிழ்நாட்டுக்கு மோடி வந்து செல்கிறார். ஆனால் மற்ற நேரங்களில் அவர் வருவது கிடையாது. இதனை பொதுமக்கள் கேள்வி கேட்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் ஒன்றிய பாஜ அரசிடம் பாதம் தாங்கி பழனிசாமி அடகு வைத்து விட்டார்.

அவருக்கு இந்த தேர்தலில் பொதுமக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, மேயர் பிரியா, கொளத்தூர், திருவிக நகர், பெரம்பூர் பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜவிடம் அடகு வைத்தவர் பாதம் தாங்கி பழனிசாமி: எடப்பாடிக்கு உதயநிதி போட்டார் சூடு appeared first on Dinakaran.

Tags : Padam Thangi Palaniswami ,Tamil Nadu ,BJP ,Udayanidhi ,Edappadi ,DMK ,Kalanidhi Veerasamy ,North Chennai ,Minister ,Udhayanidhi Stalin ,Kolathur ,Kolathur Madhavaram ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...