×

பைக்- மினி லாரி மோதல்: 2 பேர் காயம்

ஜெயங்கொண்டம், ஏப்.3: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கணபதி நகர் நடேசன் என்பவரது மகன் கொளஞ்சி (50) இவர் பெரியவளையம் சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக பெரியவளையம் பைபாஸ் ரோட்டில் ஏறி சென்று கொண்டிருந்தார் அப்போது அவ்வழியாக வந்த மினிலாரி ஒன்று கொளஞ்சி மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு மினிலாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பாலத்தின் பள்ளத்தில் மோதி தொங்கி நின்றது.

இந்த விபத்தில் கொளஞ்சி மற்றும் மினி லாரியில் வந்த நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ராம்நகர் கோரியாம்பட்டி முருகன் என்பவரது மகன் செல்வம் (47) ஆகிய இருவரும் காயமடைந்தனர். காயமடைந்த இருவரையும் அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த சம்பவம் அறிந்த ஜெயங்கொண்ட போலீசார் மினி லாரி ஒட்டி வந்து விபத்து ஏற்படுத்திய நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணமுனியப்பபாளையம் காளிமுத்து மகன் கருணாகரன் (52) என்பவர் மீது வழக்கு பதிந்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பைக்- மினி லாரி மோதல்: 2 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Jayangkondam ,Kolanji ,Natesan ,Ganapathi Nagar, Ariyalur district ,Periyavalleyam ,Dinakaran ,
× RELATED உல்லாசத்துக்கு மறுத்ததால் காதலியின்...