×

பிரேமலதாவின் பிரசாரம் திடீர் ரத்து அதிமுகவினர் அதிருப்தி திருவண்ணாமலையில் நடக்கவிருந்த

திருவண்ணாமலை, ஏப்.3: திருவண்ணாமலையில் நேற்று நடக்கவிருந்த பிரேமலதாவின் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இச்சம்பவம் அதிமுவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து காந்தி சிலை அருகே நேற்று காலை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்திருந்தனர். இந்நிலையில், காலை 7 மணியளவில் திடீரென பிரேமலதாவின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதனால், அதிமுக வேட்பாளர் உட்பட அக்கட்சியினர் அப்செட் ஆகினர்.

அதிமுக கூட்டணியில் ஏற்கனவே வலிமையான கட்சிகள் இல்லாததால் எடப்பாடி மட்டுமே பிரசாரம் செய்து வருகிறார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜ கூட்டணி கட்சிக்கு சென்றுவிட்டனர். அதிமுக கூட்டணிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட பாமகவும் கடைசி நேரத்தில் பாஜவுடன் கூட்டணி சேர்ந்தது. கடைசி நேரத்தில் தான் தேமுதிகவும் அதிமுக கூட்டணியில் சேர்ந்தது. இதனால் அதிமுக கூட்டணியில் பெரிய தலைவர்கள் பிரசாரம் செய்ய முடியாத நிலை உள்ளது. அடுத்தகட்ட பிரசாரம் குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்காமல் கடைசி நேரத்தில் பிரேமலதா தனது பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு சென்ற சம்பவம் அதிமுகவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post பிரேமலதாவின் பிரசாரம் திடீர் ரத்து அதிமுகவினர் அதிருப்தி திருவண்ணாமலையில் நடக்கவிருந்த appeared first on Dinakaran.

Tags : Premalatha ,Tiruvannamalai ,AIADMK ,Kaliaperumala ,DMDK ,general secretary ,Gandhi statue ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...