×

கச்சத்தீவு குறித்து ஆர்டிஐ வெளியாகி உள்ளதாக பச்சைப் பொய்யை கிளப்பி விட்டுள்ளனர்: மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம்

மதுரை: கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ.யில் வெளியான தகவலை வைத்து பச்சை பொய்யை பரப்புகின்றனர் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. திமுகவை பொருத்தவரை, 21 தொகுதிகளில் நேரடியாக களம்காண்கிறது.

தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் மற்றவர்களின் குறைகள், நிறைகளைப் பட்டியலிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், வரும் மக்களவை தேர்தல் சாதாரண தேர்தல் இல்லை. மாநிலத்தில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

கச்சத்தீவு குறித்து ஆர்டிஐ வெளியாகி உள்ளதாக பச்சைப் பொய்யை கிளப்பி விட்டுள்ளனர். ஜனநாயகம், நாட்டின் மீது பற்றுள்ளவர்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், எந்தப் பணியையும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர்; பேரிடரின்போது உதவி கேட்டால் ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் வந்துவிட்டதோ என்பதுபோல் பாஜகவை பற்றி மக்கள் எண்ணுகின்றனர் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

The post கச்சத்தீவு குறித்து ஆர்டிஐ வெளியாகி உள்ளதாக பச்சைப் பொய்யை கிளப்பி விட்டுள்ளனர்: மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் appeared first on Dinakaran.

Tags : RDI ,Minister Palanivel Thiagarajan ,Madura ,Madurai ,Kachativu ,R. D. I. ,Minister ,Palanivel Thiagarajan ,Lok Sabha elections ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...