- காலபைரவா
- கக்கம்மலையநாதர் கோயில்
- தேய்பிறை
- அஷ்டமி
- ஜெயங்கொண்டம்
- தேய்பிரா
- ஜெயங்கொண்டம் ககம்மலையநாதர் கோயில்
- காகம்மலைநாதர்கோயில்
ஜெயங்கொண்டம், ஏப்.2: ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் அஷ்டமி காலபைரவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதனை ஒட்டி ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோயிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு யாகமும் சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பட்டது. யாகத்தில் மஞ்சள் குங்குமம் வெட்டிவேர் நன்னாரி வேர், கடுக்காய், வெண்கடுகு உள்ளிட்ட பல்வேறு வகையான மூலிகைகள் மா, பலா, வாழை ,திராட்சை, மாதுளை ,எலுமிச்சை உள்ளிட்ட பழங்கள் இடப்பட்டன. பின்னர் சிறப்பு ஆராதனை நடைபெற்றது ஜெயங்கொண்டம் அருகிலுள்ள செங்குந்தபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கால பைரவரை வணங்கி தரிசனம் செய்தனர்.
The post தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கழுமலைநாதர்கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.