×

மூதாட்டியை மானபங்கப்படுத்திய புரோக்கர் கைது

மல்லசமுத்திரம், ஏப்.2: மல்லசமுத்திரம் அருகே, மூதாட்டியை தாக்கி மானபங்கப் படுத்திய நில புரோக்கரை போலீசார் கைது செய்தனர். மல்லசமுத்திரம் அடுத்த, வடுகபாளையம் மேல்முகம் கிராமம், பனங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் முத்து மகன் சங்கர்(37), விவசாயி. அதே கிராமத்தில், தொண்டியப்பகவுண்டர் தோட்டத்தில் வசித்து வருபவர் செங்கோடன் மகன் ராஜமாணிக்கம்(34), நிலபுரோக்கர். சங்கருக்கும், ராஜமாணிக்கத்திற்கும் இடையே பொது பாதை சம்மந்தமாக பல வருடங்களாக பிரச்னை இருந்து வந்தது.

கடந்த, 2022ம் ஆண்ட சங்கர் வீட்டிற்கு சென்ற ராஜமாணிக்கம் தகாத வார்த்தையால் பேசி, சங்கரையும் அவரது தாய் சரஸ்வதியையும்(53) கல் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். மேலும், சரஸ்வதியை தலைமுடி மற்றும் சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அப்போதைய மல்லசமுத்திரம் எஸ்எஸ்ஐ ஆனந்தராஜ் வழக்குபதிவு செய்தார். இந்நிலையில், நிலுவையில் இருந்த இந்த வழக்கின் மீது நேற்று, மல்லசமுத்திரம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு, திருச்செங்கோடு அருகே உள்ள, கோட்டப்பாளையத்தில் பஸ்க்காக நின்றிருந்த நிலபுரோக்கர் ராஜமாணிக்கத்தை கைது செய்து, திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதித்துறை நடுவர் சுரேஷ் பாபு அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

The post மூதாட்டியை மானபங்கப்படுத்திய புரோக்கர் கைது appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Muthu Makan Shankar ,Banangatoor ,Vadukapalayam Melmugam village ,Thondiapagaunter ,
× RELATED முதியவர் சாவில் மர்மம்