×

கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ 2வது நாளாக ஆய்வு

கருங்கல், ஏப்.2: கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட, கடற்கரை பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கடல் சீற்றம் காணப்படுகிறது. இதனால் இரையுமன்துறை, இனயம் போன்ற கடற்கரை பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரையுமன்துறை பகுதிகளில் வீடுகளில் கடல் நீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் இனயம் சின்னத்துறை பகுதியில் மீனவர்கள் ஓய்வெடுக்கும் ஓய்வறை கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

மேலும் கடலில் போடப்பட்ட ராட்சத கற்கள் கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளை 2வது நாளாக ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கடலரிப்பு தடுப்பு பிரிவின் செயற்பொறியாளர் அருள் சென் பிறைட்டை நேரில் அழைத்து வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டார். அப்போது மாநில மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், இனயம் இணை பங்கு தந்தை பிராங்கோ உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

The post கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ 2வது நாளாக ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Rajesh Kumar ,MLA ,Karungal ,Killiyur ,Iraiyumanthurai ,Inayam ,Dinakaran ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...