×

மனிதநேய மக்கள் கட்சி தலைமை தேர்தல் அலுவலகம் : சிந்து ரவிச்சந்திரன் திறந்துவைத்தார்

கோவை, ஏப். 2: கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளுக்கான, இந்தியா கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சி தலைமை தேர்தல் அலுவலகம் கோவை கரும்புக்கடை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. கோவை மத்திய மாவட்ட தலைவர் சர்புதீன் தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சி மாநில பொருளாளரும், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான இ.உம்மர் முன்னிலை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி மாநில பிரதிநிதி மற்றும் பொள்ளாச்சி தொகுதி பொறுப்பாளர் ஏ.கே.சுல்தான் அமீர் வரவேற்றார். திமுக தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சிந்து ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், ‘’கோவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், இந்த மண்ணின் மைந்தர். அவர், ஏற்கனவே கோவை மாநகராட்சி மேயராக இருந்து திறம்பட பணியாற்றியுள்ளார். கோவை மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை வழங்கியுள்ளார். கோவை மக்களின் தேவை என்ன? என்பது அவருக்கு நன்கு தெரியும். எனவே, அவரை, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். இதேபோல், பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியும், சிறந்த பண்பாளர், மக்களுக்காக உழைக்கும் எண்ணம் கொண்டவர். அவரையும் இத்தேர்தலில், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்’’ என்றார்.

கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பேசுகையில், ‘’என்னை இத்தொகுதியில் வெற்றிபெற செய்தால், கோவைக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் ஒன்றிய அரசிடமும், மாநில அரசிடமும் கேட்டு, பெற்றுத்தருவேன். ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக, கோவையில் தொழில்கள் நலிவடைந்துள்ளன. அதை சீர்செய்வேன்’’ என்றார். நிகழ்ச்சியில், மாநகராட்சி கவுன்சிலர் இ.அகமது கபீர், கரும்புக்கடை பகுதி திமுக செயலாளர் ஜெய்லாபுதீன், இப்ராகீம், சித்திக், தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரகுமான், மமக கோவை மத்திய மாவட்ட செயலாளர் ஏ.இப்ராகீம், மாவட்ட பொருளாளர் சிராஜுதீன், மாவட்ட துணை தலைவர் நூர்தீன், தமுமுக மாநில தொண்டர் அணி துணை செயலாளர் ஷகீர், மாநில தமுமுக செயற்குழு உறுப்பினர் பேக் அப்பாஸ், மாநில மமக செயற்குழு உறுப்பினர் ரபீக், மாவட்ட துணை செயலாளர்கள் பைசல் ரகுமான், அசாருதீன், எஸ்.எஸ்.அபு, சிக்கந்தர் பாஷா, அணி நிர்வாகிகள் ஜியாவுதீன், உமர் பைசல், ஷெரீப், சதாம் உசேன், சுபேர் அகமது, சுபையர் அகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.எம்.எஸ்.அப்பாஸ், பதுருதீன், குனிசை ஷாஜகான், திமுக வார்டு செயலாளர்கள் குதூப்தீன், இப்ராகீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோவை மாவட்ட தலைவர் கபூர், செயலாளர் சாகுல் அமீது, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்ட பொறுப்பாளர் ஹக்கீம், கோவை சாதிக், ஐடி விங் பொறுப்பாளர் கோவை ஜூேபர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மனிதநேய மக்கள் கட்சி கோவை மத்திய மாவட்ட செயலாளர் இப்ராகீம் நன்றி கூறினார்.

The post மனிதநேய மக்கள் கட்சி தலைமை தேர்தல் அலுவலகம் : சிந்து ரவிச்சந்திரன் திறந்துவைத்தார் appeared first on Dinakaran.

Tags : Humanity People's Party Chief Election Office ,Sindhu Ravichandran ,Coimbatore ,Pollachi ,Parliamentary ,All India People's Party Chief Election Office ,Karumbukkady ,Coimbatore Central District ,President ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...