×

கழுகுமலை அருகே வாலிபர் தற்கொலை

கழுகுமலை, ஏப். 2: கழுகு மலையை அடுத்த கரடிகுளம் சி.ஆர்.காலனியை சேர்ந்தவர் சிகாமணி, கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி(45). இவர்களது மகன் வேணுபிரகாஷ்(18), பென்சிங் வேலை செய்து வந்துள்ளார். மகளிர் குழுவிற்கு கடன் தொகை செலுத்துவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை மகனிடம் தனலட்சுமி பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் பணம் கொடுக்க மறுத்த வேணுபிரகாஷ், இதே பகுதியில் பாட்டி வீட்டுக்கு தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் வீடு திரும்பாத நிலையில், தனலட்சுமி சென்று பார்த்தபோது வேணுபிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவலறிந்த கழுகுமலை போலீசார் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கழுகுமலை அருகே வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Gakumala ,Kagugumalai ,KARADIKULAM ,HILL R. ,Chikamani, Karnataka ,Thanalakshmi ,Venuprakash ,Women's Group ,Kagugamalai ,
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்