×

கச்சத்தீவை மீட்க 10 ஆண்டு காலம் எதுவும் செய்யாத மோடிக்கு தற்போதுதான் ஞானோதயம் வந்ததா: அமைச்சர் ரகுபதி!

சென்னை: கச்சத்தீவை மீட்க 10 ஆண்டு காலம் எதுவும் செய்யாத மோடிக்கு தற்போதுதான் ஞானோதயம் வந்ததா? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பாஜகவினால் மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கலாம். மீனவர்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் தேர்தல் நேரத்தில்தான் மோடிக்கு ஞானோதயம் வந்ததா?. கர்நாடகாவில் ஐபிஎஸ் பணியில் இருந்த அண்ணாமலைக்கு மொழிப்போர் பற்றி தெரியாது. தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி பேசும் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்கு எதிராக பேசுவது இல்லை என்று கூறியுள்ளார்.

 

The post கச்சத்தீவை மீட்க 10 ஆண்டு காலம் எதுவும் செய்யாத மோடிக்கு தற்போதுதான் ஞானோதயம் வந்ததா: அமைச்சர் ரகுபதி! appeared first on Dinakaran.

Tags : Modi ,Kachchathiwa ,Minister ,Raghupathi ,CHENNAI ,BJP ,Kachchathivi ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...