×

வாக்காளர்களிடம் தேர்தலில் வாக்களிப்பதற்கான உறுதிமொழியினை 12 மணி நேரத்திற்குள் 494184 வாக்குகளை பதிவு செய்தனர்.

சென்னை: 29.3.2024 அன்று வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள வாக்காளர்களிடம் தேர்தலில் வாக்களிப்பதற்கான உறுதிமொழியினை 12 மணி நேரத்திற்குள் 494184 வாக்குகளை பதிவு செய்தனர்.

30.4.2024 அன்று இச்சாதனையில் ECO GREEN FOUNDATION NGO உடன் இணைந்து உலக சாதனை நிகழ்விற்காக எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (Elite World records) மற்றும் இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமியின் (India Records Academy) உலக சாதனை மேற்கோள் சான்றிதழ்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் ஆணையர் (வருவாய் (ம) நிதி) ஆர். லலிதா, தேர்தல் நடத்தும் அலுவலர்/வட்டார துணை ஆணையர் (சென்னை வடக்கு) கட்டா ரவி தேஜா, ஆகியோரிடம் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் நடுவர் அர்ச்சனா ராஜேஷ், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமியின் மூத்த ரெக்கார்ட்ஸ் மேலாளர் ஜெகந்தன் பழனிசாமி மற்றும் அலுவலர்கள், A2B மற்றும் நாட்டு நல பணி மாணவர்கள் பாரதி மகளிர் கல்லூரி திருத்தங்கள் நாடார் கல்லூரி மாணவர்கள் தியாகராய கல்லூரி மாணவர்கள் அகர்சன் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post வாக்காளர்களிடம் தேர்தலில் வாக்களிப்பதற்கான உறுதிமொழியினை 12 மணி நேரத்திற்குள் 494184 வாக்குகளை பதிவு செய்தனர். appeared first on Dinakaran.

Tags : Chennai ,North Chennai ,ECO GREEN FOUNDATION NGO ,
× RELATED வாக்கு எண்ணும் மைய பகுதிகள் ‘சிவப்பு’ மண்டலம் காவல் துறை அறிவிப்பு