×

புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வாய்க்காலின் பக்கவாட்டில் உள்ள சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி தேங்காய் திட்டு வசந்தம் நகர் பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக பழைய வாய்க்கால்களை பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தூர்வாரும் பணியில் இன்று 16 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வாய்க்கால் அருகில் இருந்த 33 ஆண்டுகள் பழமை வாய்ந்த மின்துறைக்கு சொந்தமான 7 அடி உயர மதில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுவர் இடிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 10 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு