×

முத்தையாபுரத்தில் பைக் மீது கார் மோதி மாணவன் பரிதாப பலி

ஸ்பிக்நகர், மார்ச் 31: தூத்துக்குடி முத்தையாபுரத்தில் பைக் மீது கார் மோதியதில் பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். தூத்துக்குடி அத்திமரப்பட்டியைச் சேர்ந்த பரமசிவத்தின் மகன் சஞ்சய் (14). அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவன், ஸ்பிக்நகர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார், இவரது பைக் மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த சிறுவனை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் சஞ்சய் பரிதாபமாக இறந்தான்.
விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்த முத்தையாபுரம் போலீசார், காரை ஓட்டிவந்த டிரைவரான தூத்துக்குடி நயினார்விளையை சேர்ந்த சிதம்பரம் மகன் சொரிமுத்து (35) என்பவரை கைதுசெய்தனர்.

The post முத்தையாபுரத்தில் பைக் மீது கார் மோதி மாணவன் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Muthiyapuram ,Spignagar ,Tuticorin ,Sanjay ,Paramasivam ,Atthimarapatti ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடியில் ஹேர்டை குடித்து ஆசிரியை தற்கொலை